Thursday, November 25, 2010

தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா?




ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் 5.11.2010 வெள்ளிக்கிழமை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மலையாள திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ் நடிகர்கள் பங்கேற்கிறார்கள் என்ற விளம்பரத்தை பார்த்து தமிழ் மக்களும் விழாவைப் பார்க்க சென்றிருக்கிறார்கள் அப்போது விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஆர்யாவின் பேச்சு அங்கு இருந்த தமிழர்களின் ரத்தம் கொதிக்க வைத்திருக்கிறது.


‘நான் ஒரு மலையாளியானு’ என்று ஆரம்பித்து தமிழர்களையும் தமிழ் சினிமாவையும் ரொம்பவும் கேவலமாக பேசி இருக்கிறார் ஆர்யா... தமிழ் சினிமாவை போன்று மலையாள சினிமா இல்லை. தமிழ் சினிமாவில் ஒரு பாட்டு ஒரு சண்டை காட்சி இருந்தால் போதும் நடிப்பு தேவை இல்லை, ஆனால் மலையாள சினிமாவில் அதிகம் நடிக்கவேண்டும். அதனால் தான் யாரும் மலையாள படத்தில் நடிக்க பயப்படுகிறார்கள். எனக்கு நடிப்பு இல்லாத சிறிய கதாபாத்திரம் கொடுங்கள்... மலையாளத்தில் வந்து நடிக்கிறேன்.இங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்தால் ரெம்ப ஆச்சரியம்! தமிழ்நாட்டில் இப்படி கூட்டம் பார்க்க முடியாது என்று தனது மலையாள விசுவாசத்தை ரொம்பவே காட்டியிருக்கிறார் ஆர்யா.

அவர் ஒரு மலையாளி என்பது அங்கிருந்த தமிழ் மக்களுக்கு அப்போதுதான் புரிந்திருக்கிறது.அதை கேட்டு எங்கள் ரத்தம் கொதித்தது என்றும், அந்த விழாவில் கலந்து கொண்ட தலைவாசல் விஜய் மற்றும் பாடகர் கார்த்திக் இருவரும் தமிழில் பேசியது ஆறுதல் அளித்தது என்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆர்யாவின் இந்த பேச்சுக்கு கண்டனத்தை தெரிவித்தார் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் வி.சி.குகநாதன். அதற்கு, வி.சி.குகநாதன் கயிறு திரித்து புது பிரச்சினையை கிளப்பி இருக்கிறார் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அசின் இலங்கைக்கு சென்ற விவகாரத்திலும், அது அவரின் தனிப்பட்ட சுதந்திரம் என்று அசினுக்கு வக்காளத்து வாங்கியது தென்னிந்திய நடிகர் சங்கம்.

இதைப் பற்றி மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.குகநாதன், அந்த நடிகரின் பேச்சு தமிழ் நடிகர்களை கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறது.உலக புகழ்பெற்ற நடிகர்திலகம் சிவாஜிகணேசனில் இருந்து கமல்ஹாசன் வரை பல அபூர்வ நடிகர்களை கொண்டது, தமிழ் பட உலகம். அவர்களை எல்லாம் கேவலப்படுத்துகிற மாதிரி அந்த நடிகர் பேசியிருக்கிறார். நான், எந்த நடிகருக்கும் விரோதிஅல்ல. ஆனால் தமிழர்களையும், தமிழ் கலைஞர்களையும் பழித்தால், அவர்களின் குரல்வளையை கடித்து துப்பவும் தயங்க மாட்டேன் என்றார். 'நான் கடவுள்' படத்தினால், இந்தி சினிமா உலகமே பாலாவை பிரம்மிப்போடு பார்த்து வருகிறார்கள். அதில் நடித்த ஆர்யாவுக்கு தமிழ் சினிமாவின் மகிமைப் புரியாதா என்ன?. வெறும் பாட்டையும் பைட்டையும் நம்பியா 'மதராசபட்டினம்' எடுக்கப்பட்டது. இதெல்லாம் ஆர்யாவுக்கு நன்றாகவே தெரியும்.... ஆனால் என்ன செய்வது தன் இனத்தின் விசுவாசத்தை சரியான நேரத்தில் காண்பித்திருக்கிறார் என்றே சொல்லமுடியும். அதற்காக தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா?


மலையாள சினிமா உலகின் பெரும் நட்சத்திரங்களான மம்முட்டியும் மோகன்லாலும் கமல்ஹாசனின் பெருமையை உரக்கச் சொல்கிறார்களே அது ஏன்?. மலையாள சினிமா தற்போது தமிழ் சினிமாவைப் பார்த்து கற்றுக்கொள்கிறது என்று பிரபல மலையாள இயக்குனர் ரஞ்ஜித் சமீபமாய் நடந்த 'ஈசன்' இசை வெளியீட்டு விழாவில் சொன்னாரே! இது தமிழ் சினிமாவின் பெருமை இல்லையா! சினிமாவுக்கு மொழியில்லை... மலையாளத்திலும் நல்ல சினிமாக்கள் இருக்கிறது என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தமிழ் சினிமாவால் பிழைக்கும் ஆர்யா தமிழ் சினிமாவையும் தமிழ் நடிகர்களையும் அசிங்கப்படுத்துவதா என்பதே கேள்வி! நடிக்க தெரிந்தவர்களை மட்டுமே நடிகன், நடிகை என்று சொல்கிறோம். நடிப்பே இல்லாத தமிழ் சினிமாவில் வந்து போகும் உங்களை நடிகன் என்று சொல்வது தவறில்லையா? நீங்களும் ஒரு நடிகன் என்றால் உங்கள் திறமையை காட்ட வேண்டிய இடம் மலையாள சினிமா தானே? இதுவே உலகத் தமிழர்களின் கேள்வி!


இப்போது தானே தெரிகிறது... நயன் சேச்சியுடன் ஆர்யா அடித்த லூட்டி எதற்காக என்று!!!


நன்றி : நக்கீரன்

Tuesday, October 5, 2010

எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..?


எந்திரன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக உலகமெங்கும் ஓடிக் கொண்டு இருக்கிறது.! ஆனால் எந்திரனில் பல காட்சிகள் ஆங்கிலெயரே ஆக்கரமித்து உள்ளனர்..(சண்டை & கிராபிக்ஸ் காட்சிகள் தான்) ஏன் இதுப்போல நம்நாட்டில் செய்யமுடியாதா..? சங்கர் சில படங்கள் மூலம் உச்சத்துக்கே சென்று விட்டதுப்போல் இருக்கிறார். இவர் இயக்கி அனைத்து படங்களும் வெளிநாட்டு ஸ்டியோவில்தான் கிராபிக்ஸ் செய்யப்படுகின்றன..! ஏன் தமிழனால் முடியாதா..? அப்படி என்றால் எந்திரன் வெற்றியா தோல்வியா உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கள்..!

Thursday, September 30, 2010

எந்திரன் திரை விமர்ச்சனம்-இனையத்தள உலகின் முதல் விமர்ச்சனம்.


படம் பார்த்துட்டேன்னு ஒரு சாட்சி..!
எந்திரன் இந்த படம் எடுக்க ஒப்பந்தம் ஆன முதலே இந்த படத்தை தியேட்டரில் மட்டுமே பார்க்கனும் என்ற குறிக்கோளேடு 2 வருடம் காத்து இருந்தவர்களில் நானும் ஒருவன்.(அப்படி இதுவரை திருட்டு விசிடிலதான் படம் பார்த்தியானு நீங்க முனங்குவது என் காதுக்கு கேட்க்குதுங்க..!)

இந்தியா முழுவது ரசிகர்கள் ஆவலுடன் நாளை எதிர்ப்பார்த்துக் கொண்டு எந்திரன் படம் யூஏயி அரபியா நாட்டில் இன்று காலை 7.30 மணி காட்சியும் முதல் காட்சி திரையிட தொடங்கிவிட்டன ரஜினி படம் என்றால் முதல் நாள் முதல் காட்சி என்ற பழைய முறுக்குடன் டிக்கெட் எடுத்து படம் பார்த்துட்டேனுங்கோ..(அப்படினா வயசு ஆயிடுச்சா.?)
சரி இப்போ படத்தின் கதைக்கு வருவோம்..!
மனிதனுக்கு போல் காதல் ரோபோவுக்கும் வந்தால்..?! அதை உறுவாக்கியவனே வேண்டாம் என சொல்லும் போது என்ன நடக்கும் எனபதையே முக்கியதுவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம்.!(எனக்கு இப்படிதானுங்க புரியுது சங்கர் என்ன நினைத்து எடுத்தாரோ..?)
ஆரம்பம் முதலில் ரஜினி தோன்றும் காட்சி எந்தவித ஆர்பார்ட்டம் இல்லாமல் மிகவும் எளிமையாகவும் ரஜினிக்கு பூ கொடுக்கும் ரோபோ காட்சியும் இனிமையாகவும் இருந்தது இதற்க்காக ரஜினிக்கு ஒரு சாபஷ்..!(ஏன்னா இப்பொ உள்ள கத்துக்குட்டியும் பயங்கர ஆக்‌ஷனுடன் தோன்றுவதை பார்த்து பார்த்து ச்சேனு… இருக்கும் இந்த காலத்தில் அதுவும் சூப்பர் ஸ்டார்..? சூப்பர்தானுங்கோ..!)
சந்தானம் & கருனாஸ் கொஞ்சம் சிரிக்க வைக்கிராங்க அதை விட ரோபோ ரஜினி மிகவும் ஜாலியாகவும் ரசிக்கும் படியாகவும் சிரிக்க வைத்து இருக்கிறார்.!
(என்னாடா இன்னும் ஐஸ் பற்றி ஒன்னும் சொல்லலேனு நீங்க முனங்குவது எனக்கு கேட்க்குது)
என்ன சொல்வதுங்க இன்னும் 10 வருசத்துக்கு அவங்கத்தான் உலக அழகி..!
இந்த பொம்பள என்னாமா கல்க்கை இருக்கு சூப்பர்தானுங்கோ…! நடிப்பு நடனம் காதல்னு கலக்கி இருக்காங்க(ரோபோவே மயங்கிடுச்சுனா பார்த்துக்கோங்க.!)
பாடல்கள்.! முதல் பாடல் நான்கு வரி பாடலுடன் எஸ்பி யின் குரலுடன் நமக்கு ஒரு முறுகேற்றுகிறது..! பின்பு வரும் காதல் அனுக்கள், இரும்பிலே ஓர் இருதயம், கிளிமாஞ்சாரோ மூன்று பாடல்களும் நம்மை படம் விட்டு வரும் போது முனுமுனுக்க வைக்கின்றன..!காட்சி அமைப்பும் நடனமும் ரஜினிக்கு இன்னும் வயசாகலனு சொல்ல வைக்கின்றன..!
இடையில் காதல்,செண்டிமெண்டுனு படம் நகர்ந்தாலும் கிளைமேக்ஸ்க்கு ஒரு தனி சபாஸே சங்கருக்கு சொல்லனும்..! கடைசி 20 நிமிடமும் நம்மை அரியாமலே கை தட்ட வைக்கின்றன காட்சிகள்..!
ரகுமான் இசை படிவில் படம் தொடக்க முதல் கடைசி நிமிடம் வரை ராஜியமே நடத்தியிருக்கார்னு சொல்லாம்..! உங்களுக்கும் ஒரு தனி சாபாஷ்ங்கோ..!
படம் குடும்பத்துடன் குதுகலமாக பார்க்கலாம்…!100% காரண்டி..!!
ஆனா இது ஒரு ரஜினி ரசிகனா பார்க்காதிங்க ஏன்னா ஒரு பஞ்ச் டயலாக்கும் இல்லை 20 பேரை பறக்க பறக்க அடிக்கும் சண்டை காட்சி இல்லவே இல்லை.! கலாபவன் மணிக்கு பயந்து ஓடுவதும் ரஜினியா இப்படி தோன்ற வைக்கிறது..! ஐஸ்வின் முத்ததிற்க்காக கொசுவை பிடிக்க சொல்லும் ரோபோ ரஜினி இந்த காட்சி தேவையானு முனுமுனுக்க வைக்கிறது..! மொத்ததில் இது ஒரு சங்கர் படம்..!
எந்திரன் ஒரு மந்திரன்..!


Monday, July 12, 2010

ரியலும் ரீலும் எந்த நடிகர் நடித்தால் எப்படி இருக்கும்..!!

இது ரியலு



கிழே ரீலு இந்த காட்சியில் எந்த நடிகர் நடித்தால் எப்படி இருக்கும்..!!


விஜயகாந்த்


கமலஹாசன்




குருவி விஜய்




அஜித்

Saturday, July 3, 2010

எத்தனை கேள்பிரண்டு இருந்தால் ஆனந்தம் கிடைக்கும்..?

உங்களுக்கு 1 கேள்பிரண்ட் இருந்தால் ஆனந்தமாக இருக்கலாம்

உங்களுக்கு 2 கேள்பிரண்ட் இருந்தால் மஹாஆனந்தமாக இருக்கலாம்

உங்களுக்கு 3 கேள்பிரண்ட் இருந்தால் பரமாஆனந்தமாக இருக்கலாம்


உங்களுக்கு 10க்கும் மேல் கேள்பிரண்ட் இருந்தால் ....?


*



*



*



*



*



*



*



*
நித்யாணந்தமாக இருக்கலாம்..!

Wednesday, June 23, 2010

காலக்கொடுமடா சாமி......

வேற யாரும் பார்க்கும் முன் சீக்கரம் கலக்குங்க....

ம்.ம்.. சரியாதான் மிக்ஸ் பண்ணிருக்கீங்க....


அடிச்சுட்டு சீக்கரம் கொடுங்க....

நாங்களும் குடிப்போம்ல.....

கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் எதிரே குடிகார ஜோடி கலக்கிய போது எடுத்தப்படம்..!
நன்றி : தினகரன்

Thursday, March 4, 2010

நித்யானந்தா - சினிமா நடிகைகளும்...!



பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்த சாமியார் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொதிப்படைந்த பக்தர்கள் பல நகரங்களிலும் உள்ள அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

பல இடங்களில் நித்யானந்தரின் உருவப் படங்களை செருப்பால் அடித்து கொளுத்தினர். திடீரென நித்யானந்தா தலைமறைவானது பரபரப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நித்யானந்தாவின் ஆசிரமங்களுக்கு பல நடிகைகள் வந்து சென்றுள்ளனர். பழம் பெரும் கதாநாயகியின் சகோதரி அவரது மகள் ஆகியோரும் நடிகைகள். சகோதரி மகள் நடிகைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் நித்யானந்தாவை சந்தித்துள்ளார். அப்போது அவருடன் நடிகைக்கு தொடர்பு ஏற்பட்டது. நித்யானந்தாவுக்கு நடிகைகளுடன் தொடர்பு ஏற்பட இவர் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. ஆசிரமத்துடன் தொடர்புடைய நடிகைகளின் பட்டியலில் சினிமாவிலிருந்து தற்போது ஒதுங்கியிருக்கும் நடிகைகள் நடித்து வருபவர்கள் திருமணமானவர்கள் என பலர் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவருமே நித்யானந்தாவுடன் நெருங்கி பழகியுள்ளனர். ஹீரோயினாக நடித்து பிறகு சீரியலில் நடித்தும் அங்கிருந்தும் காணாமல் போன யுவ நடிகை சின்னப்பூவாய் மெல்லப்பேசும் நடிகை என பலருக்கு நித்யானந்தா ஆசிரமத்துடன் தொடர்பு உள்ளது. விஷயம் வெளியானதால் அந்த நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.


நிர்மலமான நடிகை
நித்யானந்தாவிடம் பல சினிமா நடிகைகள் தொடர்பு வைத்துள்ளனர். அவர்களில் ஒருவர் நடிகை ராகசுதா. இவர் தமிழில் ராமராஜன் ஜோடியாக ‘தங்கத்தின் தங்கம்’ நெப்போலியன் நடித்த ‘தமிழச்சி’ ‘தம்பி’ ‘அம்முவாகிய நான்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கை மகளான இவர் யோகா வகுப்புகளுக்கு சென்று வந்தார். சென்னையில் நித்யானந்தா நடத்திய யோகா வகுப்புக்கு சென்று வந்த அவர் நித்யானந்தாவை பார்த்த உடனேயே அவர் காலில் விழுந்து வணங்கினாராம். அதிலிருந்து அவருடைய ஆசிமரத்தில் சேர்ந்து சன்னியாசி ஆனார். மைசூரிலுள்ள இவரது ஆசிரமத்தில் சுவாமி நிர்மலானந்தா என்ற பெயரில் சில வருடங்களாக யோகா கற்றுக்கொடுத்து வருகிறார் ராகசுதா. இவர்தான் சாமியாருக்கு பல நடிகைகளை அறிமுகப்படுத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் பல முன்னாள் நடிகைகள் மற்றும் டிவி நடிகைகளும் அடங்குவர் என்றும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மோசடி புகார்கள் குவிகின்றன

ஆசிரமம் அமைந்துள்ள இடத்திற்கு வந்திருந்த அதே ஏரியாவைச் சேர்ந்த பாபு என்பவர் கூறும்போது “நித்தியானந்தா பீடம் 2003ம் ஆண்¢டு வாக்கில் அமைக்கப்பட்டது. இதற்காக இப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் மிரட்டி நிலங்கள் குறைந்த விலையில் வாங்கப்பட்டன. சில பகுதிகளில் அடுத்தவர் நிலங்களையும் ஆக்கிரமித்தனர்’’ என்றார்.

சந்தனக்கட்டை மீட்பு் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் நேற்று மதியம் வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். டி.சி.எப். ஆசிரமத்தில் சுமார் 60 முதல் 80 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாமியார் புலித்தோல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்தும் வனத்துறை விசாரணை செய்து வருகிறது.

80 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆசிரமத்தின் உள்ளே 8 முதல் 10 கட்டிடங்கள் உள்ளன. சில கட்டிடங்கள் வெளிநாட்டு பக்தர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர தியானம் செய்வதற்கு குடிசை வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 3 குடிசைகள் நேற்று தீவைத்து கொளுத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் அதை கொளுத்தினார்களாடூ அல்லது ரகசிய ஆவணங்களை அழிக்கும் முயற்சியா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

நித்யானந்தா தலைமறைவு

கொதிப்படைந்த பக்தர்கள் பல நகரங்களிலும் உள்ள அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பல இடங்களில் நித்யானந்தரின் உருவப் படங்களை செருப்பால் அடித்து கொளுத்தினர். திடீரென நித்யானந்தா தலைமறைவானது பரபரப்பை அதிகரித்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் நித்யானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் நடத்தி வருபவர் பரமஹம்ச நித்யானந்தா (31). தமிழகத்தில் சென்னை திருவண்ணாமலை உள்பட பல நகரங்களிலும் இவரது ஆசிரமங்கள் உள்ளன. உலகின் பல நகரங்களுக்கும் சென்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். இந்நிலையில் பிரபல நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் படுக்கை அறை வீடியோ காட்சிகள் நேற்று வெளியாயின. இது பெரும் பரபரப்பையும் பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை பொதுமக்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் நேற்று இரவு முற்றுகையிட்டனர். ஆசிரமத்துக்கு உடனே சீல் வைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பதற்றம் அதிகரித்ததால் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சிவபாபு கைது செய்யப்பட்டார். ஆசிரமத்தில் தங்கியிருந்த 45 ஊழியர்கள் நேற்று நள்ளிரவு நித்யானந்தாவின் பேனர்கள் போஸ்டர்களை ஆவேசமாக கிழித்து எறிந்துவிட்டு வெளியேறினர். ஆசிரமத்தை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சொந்த ஊரான தி.மலையில் ஆசிரமம் அமைக்க நித்யானந்தா ஆசைப்பட்டார். இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பவழக்குன்று மலையை ஆக்கிரமிக்க முயன்றுள்ளார். அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் 2 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதையில் உள்ள நிருதிலிங்கம் அருகே 3 ஏக்கர் பரப்பில் ஆசிரமம் அமைத்தார். அங்கு அவர் தங்க சொகுசு அறையுடன் கட்டிடம் கட்டப்பட்டது. திருவண்ணாமலைக்கு வரும்போது அங்குதான் தங்குவார். கடந்த ஜனவரி 8ம் தேதி பிறந்தநாள் விழாவை இங்கு விமரிசையாக கொண்டாடியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மலை மாவட்ட இந்து முன்னணி தலைவர் டி.எஸ்.சங்கர் கூறுகையில் ‘‘ஆடம்பர வாழ்க்கை வாழும் நித்யானந்தர் கிரிவலப்பாதையில் ஆசிரமம் கட்டக் கூடாது என்று ஏற்கனவே கூறினோம். அவரது சுயரூபம் தற்போது அம்பலமாகியுள்ளது. அவரை உடனே கைது செய்ய வேண்டும். தி.மலைக்குள் அவரை இனி விடமாட்டோம்’’ என்றார். புதுச்சேரி வில்லியனூர் ஏம்பலத்தில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்தை பொதுமக்கள் சூறையாடினர். ஜன்னல்கள் விளக்குகள் மின்விசிறிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சாமியார் பேனரை தீவைத்து கொளுத்தி செருப்பால் அடித்தனர். பதற்றம் அதிகரித்ததால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் இந்து முன்னணி அமைப்பினர் மாநில பொதுச்செயலாளர் முருகையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நித்யானந்தாவை கைது செய்து சொத்துக்களை முடக்க வேண்டும் என்று மக்கள் கோஷம் எழுப்பினர்.
கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் பேனர்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கடலூர் மோகினிபாலம் பகுதியில் ஆசிரமத்தின் பெயர்பலகையை பொதுமக்கள் தார்பூசி அழித்தனர். நெல்லை டவுனில் உள்ள நித்யானந்தர் தியான மையத்தில் நித்யானந்தா படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர் போஸ்டர்களை நிர்வாகிகளே கிழித்து எறிந்தனர். இந்த மையத்தில் சில மாதம் முன்பு அவர் ஆன்மீக உரையாற்றியுள்ளார். சீர்காழி சட்டநாதபுரம் மனோன்மணியம் நகரில் நித்யானந்த பீடத்தை அவர் சமீபத்தில் திறந்துவைத்தார். இங்கு தினமும் பஜனை தியானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. டிவியில் ஆபாச காட்சிகளை பார்த்த மக்கள் ஆவேசமடைந்து நித்யானந்தா படங்கள் பேனர்களை நேற்று இரவு தீ வைத்து கொளுத்தினர்.

சென்னையில் 15க்கும் அதிகமான இடங்களில் அவரது சீடர்கள் ஆசிரம கிளை வைத்து தியான வகுப்புகள் ஆன்மீக நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தி வந்துள்ளனர். நேற்று இரவோடு இரவாக அனைத்து இடங்களில் இருந்த போர்டுகள்இ பேனர்கள் அகற்றப்பட்டன. பல இடங்களில் ஆசிரம கிளைகள் பூட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் செக்ஸ் லீலை காட்சிகள் வெளியானதை தொடர்ந்து நித்யானந்தா திடீரென தலைமறைவாகிவிட்டார். ஆசிரம நிர்வாகிகள் செல்போனில் அவரை தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை.

நித்தியானந்தா தலைமறைவாகிவிட்டார் கமிஷ்னர்
பரமஹம்ச நித்தியானந்தா சாமியார் பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாச லீலைகளில் ஈடுபட்டிருக்கும் வீடியோ வெளியானது. இதையடுத்து நாடெங்கிலும் நித்தியானந்தாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நேற்று சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ராம.சிவசங்கர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தார். மேலும் பல வழக்கறிஞர்களூம் புகார் கொடுத்தனர். இந்நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர் ’’வழகறிஞர்களின் புகாரை ஏற்று நித்தியானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’என்று தெரிவித்தார். நித்தியானந்தா தலைமறைவாகிவிட்டார் என்பது உண்மை’’என்றும் தெரிவித்தார்.

நன்றி : தினகரன்
தினகரன்

Tuesday, March 2, 2010

இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்!



1. எண்முறையையும், பூஜ்யத்தையும் கண்துபிடித்த நாடு.

2- பூஜ்யத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி ஆரியபட்டர் பிறந்துவளர்த்த பூமி.

3- செஸ் விளையாட்டு கண்டுபிடிக்கபட்ட நாடு.

4- கிரானைட்(சலவைக் கல்லால்)1000-ஆண்டுகளுக்குமுன் கட்டபட்ட உலகின் முதல்ஆலயம்(தஞ்சை பிரகிதீஸ்வர்ர்)உள்ள நாடு.

5- உலகில் மிக அதிகமான ஆட்களை வேலைக்கு அமர்த்தும் இரயிவே அமைப்பு உள்ள நாடு.

6- உலகில் அதிகமான தபால் நிலையங்கள் உள்ள நாடு.

7- உலகின் முதல் பல்கலைகழகம் உருவாக்கப்பட்ட நாடு (கி.மு.700இல்)

8- 1896-ம் ஆண்டுவரை வைரம் கிடைத்த ஒரே நாடு.

9- மனித குலத்திற்கு மருத்துவக் கல்விமுறையை முதன் முதலாக ஆறிமுகப்படுத்திய நாடு.

10- உலகின் மிக உயரமான பெய்லி பாலத்தைக் கொண்டுள்ள நாடு.

11- உலகின் மிகப் பழமையான, தொடர்சியான கலாச்சரம் கொண்டுள்ள நாடு.

12- தனது கடந்த பத்தாயிரம் ஆண்டு வரலாற்றில் எந்த நாட்டையும் ஆக்ரமிக்காத நாடு.

13- உலகின் மிகப் பெரிய ஐனநாயக நாடு.

14- உலகில்இன்றுவரை தொடர்த்து மக்கள்வாழ்ந்து கொண்டிருக்கும் மிகப் பழமையான நகரைக் கொண்டுள்ள நாடு.

15- வேளாண்மைக்காக முதலில் கட்டப்பட்ட நீர் தேக்கத்தைக் கொண்டுள்ள நாடு.

16- அறுவை சிகிச்சை முதலில் நடத்தப்பட்ட நாடு இந்தியாதான். உலக அறுவைச் சிகிச்சையின் தந்தை சுசுருதா!

17- 5000 ஆண்டுகளுக்கு முன்னதாக அநேக கலாச்சாரங்கள் காடுகளில் வாழும் நாடோடி மக்களின் கலாச்சாரமாக இருந்த வேளையில் மிகப் பழமையான நாகரிகத்தை உருவாக்கிய நாடு.

18- முக்கிய 4 மதங்கள் பிறந்த நாடு (இந்து, புத்தம் , சைனமதம், சீக்கியம் . உலக மக்கள் தொகையில் 25 விழுக்காடு மக்கள் இவற்றைப் பின்பற்றுகின்றனரர்)

19- வன்முறையின்றி ஜனநாயகத்தைப் பெற்ற நாடு.

20- உலகில் விஞ்ஞானிகளையும், பல அறிவியியல் வல்லுனர்களையும் அதிகமாக கொண்டுள்ள இரண்டாவது நாடு.

21- குளியல் அறைகளை முதலில் கட்டிய நாடு (ஏறத்தாழ 4500 ஆண்டுகளுக்கு முன்னர்).

22- நல்ல மிளகாயும், மாங்கனியும் முதலில் பயிர் செய்த நாடு.

23- காய்கறிகளைப் பயிர் செய்வதற்கான எண்ணம் உதித்த நாடு.

24- முதலில் மருத்துவனை கட்டிய நாடு (ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர்).

25- இளையோரை அதிகமாக கொண்டுள்ள நாடு (35 வயதுக்குட்பட்டவரகள்.) 1.71 விழுக்காட்டினர் .அதாவது 74 கோடியே 20 இலட்சம் பேர்.ஒவ்வோர் ஆண்டும் 22 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பிறக்கின்றனர்). ஆண்டுகளுக்கு

மேலே கூறப்பட்ட அத்தனை பெருமைகளுக்கும் சொந்தமான நாடு “நமது இந்தியா” தான்.


நன்றி :
ஈகரை தமிழ் களஞ்சியம்

Monday, March 1, 2010

ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!!


நான் ஏழாவது படிக்கும் போது என்னமோ தெரியல ரஜினி மீதும் அவர் படங்கள் மீதும் அளவுக்கடந்த பிரியம் ரஜினிய தவறா சொன்னா கடுமையான் கோபம் வரும்..! ஏன் ஏன் என என்னும் ஒரு கேள்வி அப்போதுதான் எங்க தெரு பசங்க அவன் ரஜினி ரசிகண்டானு சொன்னாங்க..!?
என்னைப்போலவும் எங்க தெருவில் ஒருசில பசங்க ரஜினியின் ரசிகனா இருந்தாங்க நாங்கள் ஒன்றாக கூடினோம்….. எங்க தெருவிலும் ஒரு ரசிகர் கூட்டம் உருவானது எங்க தெருவுக்கும் பக்கத்து தெரு பசங்களுக்கும் எப்போதுமே ஆகாது..! எங்களுக்கு போட்டியாக அவர்களும் ரஜினி ரசிகராக ஆனார்கள்..!!?
அவர்களுக்கும் எங்களுக்கும் ஒரு போட்டி அப்போ எங்க ஏரியாவுல மாவிரன் படம் இன்று முதல்னு போஸ்டர் ஒட்டி இருந்துச்சு அங்க எங்க ஏரியா ரசிகர் மன்றத்தின் மிக பெரிய ஒரு கண்ணாடி போட்டோ மாட்டி இருந்தார்கள்.அதேப்போல் நாமும் வைக்கலாம் என..! யார் பெரிய போட்டோ வைக்கிரார்கள் என்பதுதான் போட்டி..
எங்க தெரு பசங்களும் ஒரு முடிவு பண்ணினோம் அவரவர் வீட்டில் ஒரு ரூபாய் வசுல் செய்வது என்று அதேப்போல் கூட்டமாக சென்று அவஅவரின் அம்மாக்களை சந்தித்து விபரம் கூறினோம்..ஒருசில அம்மாக்களை தவிர மற்றவர்கள் வீட்டில் திட்டுதான் கிடைத்த்து… மொத்த வசூல் 7ரூபாய்தான் ஆனாது இதை வைத்து ஒன்னுமே செய்யமுடியாது.. அப்போது ஒரு போட்டோ பிரேம் செய்யனும்னா குறைந்த்து 25 ரூபாயாவது தேவை..!
என்ன செய்வது என ஆலோசிச்ச்துக் கொண்டு இருந்த போது என் நண்பன் சொன்னான் டேய் எங்க தாத்தா போட்டோ பரனியிலே ரொம்பநாளா கிட்க்கது யாருக்கும் தெரியாம எடுத்துதாரேன்னு சொன்னான்.எனக்கும் அதுசரினு பட்டது. நான் எப்பாடா கொண்டுவருவேனு கேட்டேன் மதியம் அம்மா தூங்கிடுவா அப்போ கொண்டுவரேன்னு போய்ட்டான்.. நானும் நண்பனின் வரவுக்காக காத்துக்கிடந்தேன்..
வந்தான் நண்பான் நான் நினைத்தவிட பெரிய போட்டோ.. வயதானவனிரின் தலையில் பொட்டுவைத்த அந்த தாத்தாவை பார்க்க பாவமா இருந்துச்சு நமக்கு போட்டிதானே முக்கியம் என பின்னில் இருந்த ஆணிகளை மெதுவாக உருவி போட்டோவை எடுத்துவிட்டேன்..நண்பன் சொன்னான் கிழித்துடுடலாம்டா இல்லாட்டி மாட்டிக்கொள்வோம் என்றான் நானோ வேண்டாம்டா மாவிரன் சினிமா மற்றியவுடன் அதை அதே போட்டோ மாற்றி உன் வீட்டில் வைத்து விடுனு சொன்னேன்…அவனும் நல்ல ஐடியா செய்துவிடுவோம்னு சொன்னான்..
வசூல் அனா 7ரூபாய்க்கு ஒரு ரஜினி படம் வாங்க மார்கெட் சொன்றோம் கிடைக்கவில்லை..! ஒரு கடையில் காலண்டர் மாட்டியிருந்த்து அதில் ரஜினியின் அழகான போட்டோ அதை விலைக்கு வாங்கினோம்..
மாட்டினோம் தியோட்டரில் போட்டோவை எதிர் தெரு பசங்க மூக்கு உடைந்தது.. அவர்களை காணும் போதெல்லாம் கிண்டல் செய்தோம்..

இப்படி பல முறை செய்து வீட்டில் உதை வாங்கியதுதான் எங்களுக்கு கிடைத்த மெடல்கள்..!




இப்போ வாரேன் அஜித்க்கு மாறிய கதைக்கு.. நாம் ரசிக்கும் கலைஞன் போல் வேர் ஒருவர் செய்தால் அது நமக்கு பிடிக்காது அது அவர் செய்தால்தான் பிடிக்கும் அதுப்போல 1998 ல் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்கள் விஜய் & அஜித் அதில் விஜய் ரஜினியின் ரசிகர்களை கவர்வது போல் செய்த சில பஞ்ச் டைலாக்கும் ஸ்டைல்களும் என்னை அவர் மீது ஒரு பெறுப்பை உறுவாக்கியது அதில் மறுபட்டவராக நம்ம தல தெரியவே அவரின் காதல் கோட்டை,ஆசை & அவள் வருவாளா போன்ற படங்கள் என் மனதில் நீங்க இடம் பிடித்து இருந்தனா..


என்னுள் அஜித் என்ற கலைஞன் உள்ளே வந்தான்..பின் அவரின் படங்களிம் பஞ்ச் வர தொடங்கின அதன் பிறகு வந்த அனைவரின் படங்களும் பஞ்ச் டைடில் சாங்க என சினிமா மீதே பெரிய வெறுப்பை ஏற்படுத்தி விட்டன..சமிபத்தில் பார்த்த படம்தான் அசல் என்னுள் மீண்டும் அந்த கலைஞன் உள்ளில் வந்தான்.ஏன் என்று தெரியல தல……??????

Thursday, February 25, 2010

அடபாவிகளா இப்படியும் ஒரு தயாரிப்பு..!


ச்சீ ச்சீ என்னா இது..? இது என்னானு கண்டுபிடிக்க அப்படியே கொஞ்சம் கீழே வாங்க..!!


*



*



*



*



*



*



*



*



*



*


அட மவுஸா..!! பாவம் மக்கா ஏமாந்துடுச்சுங்க..ஹி..ஹி..ஹி

Wednesday, February 24, 2010

ஹைய்..ஹைகூ...!




முகவரி

தொலைந்துவிட்டதா..

மலர்களிடம்

விசாரிக்கிறதே

வண்டு.!



நடமாடும் கோலம்

காலில்

மருதாணி..!



உடைக்க விருப்பம்

பாஸானால் தேங்காய்

பெயிலானால் பிள்ளையார்.



ஒரு சாண் வயிற்றுக்கு

எண் சாண் உடம்பு விற்றாள்

விலைமாது.!




திருப்பதியில் திருடன்

மொட்டையானது…..

உண்டியல்.!



ஆடை உருவியும்

அம்மண மாகவில்லை

பால்..!



சமையல் முடிந்தா?

அடிக்கடி விசாரிக்கும்…

காகம்.!



விஷம்தீண்டாமலே

நுரை தள்ளியது….

அலைகளுக்கு.!

எனக்கு ஒரு சந்தேகம் தீர்த்து வையுங்க பிலீஸ்...!




என் கூட உள்ள நண்பர்கள் அடிக்கடி ரெண்டு கழுத வயசாச்சு இதுகூட தெரியலனு திட்டுறாங்க அப்படினா ஒரு கழுதைக்கு எத்தனை வயசுனு சொல்லுங்க பிலீஸ் இல்லேனா தலையே வெடிச்சுடும் போல இருக்கு..!!??

Tuesday, February 23, 2010

வரப்போகிறது பெண்களுக்கான வயாகரா...!


சர்வதேச பாலியல் மருத்துவக் கருத்தரங்கில் அது ஒரு விறுவிறுப்பான கட்டம்.
- நாளுக்கு நாள் ஆண்களுக்கு விரைப்புத்தன்மை குறைந்து போக என்ன காரணம்?
- அந்த குறைபாட்டிற்கு காரணம் மனதா, உடலா?
- அதனைக் கண்டறிவது எப்படி?
- சரி செய்வது எப்படி...?
- இப்படி கேள்விகள் டாக்டர்களிடமிருந்து பறந்து வந்து கொண்டிருக்க, நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தார், டாக்டர் கணேசன் அடைக்கண். இவர் சர்வதேச பாலியல் ஆராய்ச்சி நிபுணர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மகப்பேறு துறை டாக்டர்.
இத்தகைய மாநாடுகள் ஒருபுறம். சர்வதேச செக்ஸ் ஆராய்ச்சிகள் மறுபுறம். இவை எல்லாம் நடந்து கொண்டே இருந்தாலும்... சமூகம் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் குறைந்திருக்கின்றனவா?
- இல்லை.
இளம் வயதிலேயே உடலுறவு வைத்துக் கொள்வது, திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரிப்பது, திருமணத்திற்கு முந்தைய நாள் காதலனோடு ஓடிப்போய் விடுவது, திருட்டுக் காதலை தொடர கணவரையே கொலை செய்வது என்பதெல்லாம் நடந்து கொண்டேதானே இருக்கின்றன. இன்னொரு புறத்தில் செக்சில் திருப்தி அடையும் மனைவிகளின் எண்ணிக்கை குறைகிறது. விவாகரத்துக்கள் அதிகரிக்கிறது.
-இவைகளை எல்லாம் கேள்விகளாக்கி, மனதில் வைத்துக் கொண்டு டாக்டர் கணேசன் அடைக்கண் அவர்களிடம் கேள்விகளை தொடர்ந்தோம்...!

நீங்கள் வயாகராவில் இருக்கும் `நைட்ரிக் ஆக்சைடு' செயல்பாடு பற்றி ஆராய்ச்சி செய்து உலகத்திற்கு உணர்த்தினீர்கள். தற்போது பெண்களுக்கான வயாகரா கண்டுபிடிப்பு எந்த நிலையில் இருக்கிறது?

ஆண்களுக்கான வயாகரா எப்படி செயல்படுகிறது என்பதை முதலில் விளக்குகிறேன். செக்சின் அடிப்படையே ஆசைதான். ஒரு ஆண், இன்னொரு பெண்ணோடு உடலுறவு கொள்ள நினைக்கும் போது ஆணின் நரம்பு நாளங்களில் `நைட்ரிக் ஆக்சைடு' என்ற வாயு திரவம் உருவாகும். அப்போது செல்களில் இருக்கும் `சைக்கிளிங் சி.ஜி.எம்.பி.' என்பது ஆண்குறி திசுக்களை நீளச்செய்யும். அப்போது உடலில் இருந்து, `போஸ்போ டை எஸ்டரேஸ்' என்பது சுரந்து உடலுறவு ஆசையை குறைக்கும் விதமாக செயல்படும். வயாகரா சாப்பிட்டால், இந்த ஆசைக் குறைப்பு திரவத்தை சுரக்காமல் செய்யும். சைக்கிளிங் சி.ஜி.எம்.பி.யை அதிகரிக்கச் செய்யும். இதில் நைட்ரிக் ஆக்சைடு வாயு திரவம் செக்ஸ் செயல்பாட்டிற்கு உந்துதலாக இருக்கும் என்பதை நான் கண்டுபிடித்தேன்.

இனி பெண்களின் பிரச்சினை பற்றி சொல்கிறேன். பெண்களின் செக்ஸ் ஆசைகள், தூண்டுதல், உச்சகட்டம் போன்றவைகளைப் பற்றிய ஆய்வுகள் மிக மந்த கதியில் தான் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் ஆண்களின் சுயநலம். ஒரு ஆணுக்கு செக்சில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை அவனது ஜோடியான பெண்ணால் கண்டுபிடித்து விட முடியும். அவளுக்கு இருக்கும் குறைப்பாட்டை அவளே கண்டுபிடித்தாலும், வெளியே சொல்வதில்லை. கலவி என்பது ஆண்- பெண், சமூகம் சார்ந்த பிரச்சினை. அதனால் பெண்களுக்கும் வயாகரா போன்ற தூண்டுதல் மருந்துகள் தேவை என்பது உணரப்பட்டிருக்கிறது.

பெண்களின் வயாகரா கிட்டத்தட்ட கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அது, பெண்களின் மூளையில், உடல் இயக்கத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களை அமெரிக்காவில் ஆராய்ந்து இறுதி முடிவுக்கு வந்திருக்கிறார்கள். மனித குரங்குகளைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இன்னொரு கேள்வி, பெண்கள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்டிருக்கிறது.

`நாங்கள் செக்சில் திருப்தி அடையவில்லை என்பது போன்ற மாயையை உருவாக்கி, எங்களுக்கு மருந்து தயாரிக்கிறீர்கள். அதன் மூலம் நாங்கள் செக்ஸ் பற்றியும், தூண்டுதல் மருந்து பற்றியுமே அதிகமாக சிந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்' என்று சொல்கிறார்கள். இதுவும் சிந்திக்க தகுந்ததாக இருக்கிறது. பெண்களுக்கான வயாகரா இரண்டு ஆண்டுகளுக்குள் விற்பனைக்கு வந்துவிடும்.''

பெண்களின் ஆசையைத் தூண்டும் மருந்துகள் வந்து விட்டால், அதை பெண்களுக்கு தெரியாமலேயே பானங்களில் கலந்து கொடுத்து பெண்களை ஆண்கள் வீழ்த்தும் நிலை உருவாகி விடுமே?

``இதுவும் சிந்திக்க வேண்டிய விஷயம்தான். ஆனால் ஆண்களுக்கு தெரியாமல் வயாகராவை கலந்து கொடுத்து, அவர்கள் ஆசையைத் தூண்டும் விதத்தில் இதுவரை எந்த சம்பவமும் நடக்கவில்லை. அதனால் பெண்களை மாத்திரைகளால் வசீகரிக்கும் வாய்ப்பு குறைவுதான். இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்கள் மூளையில் (அதாவது மனதில்) ஆசை உருவானால்தான் உடலால் அதை வெளிப்படுத்த முடியும். அதனால் மனமிருந்தால் தான் செக்சில் மார்க்கம் உண்டு.''

திருமணத்திற்கு முந்தைய நாள் பெண்கள் பழைய காதலனோடு ஓடிவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறதே? எப்படி தடுப்பது?

``சமூகம் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் இது. ஒரு பெண்ணுக்கு நெருக்கடி கொடுத்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்யும் போது அவள் காதலனை மறக்க முடியாமலும், புதிதாக வரப்போகும் கணவனைஏற்றுக் கொள்ள முடியாமலும் தவிப்பாள். தொடக்கத்தில் எது சரி என்று தெரியாமல் குழம்பி, நாட்களை கடத்தி விட்டு, திருமணத்திற்கு முந்தைய நாள் அவளுக்கு இறுதி கெடுவாகி விடுகிறது. அன்று அவள் ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. காதலனே சிறந்தவன் என்று நினைப்பதால் அவனோடு சென்று விடுகிறாள்.
சீன வரலாற்றைப் பார்த்தால் கடந்த 100 ஆண்டுகளாக அங்கே காதல் திருமணங்கள்தான் நடக்கின்றன. அதனால் திருமண வயது ஆனதும் அங்குள்ள பெண்கள் தங்கள் தேடுதல் வேட்டையைத் தொடங்கி விடுகிறார்கள். 2,3 வருடங்கள் பழகிப்பார்ப்பார்கள். அப்படி பழகுவதற்கு `கோட்ஷிப்' என்று பெயர். பழகிப் பார்த்து திருமணம் செய்துகொள்வார்கள். 30 வயது வரை ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் பெற்றோர்கள் அவளுக்கு நல்ல நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பார்கள். அதுதான் அவர்கள் வேலை. இந்த மாதிரியான நிலை இந்தியாவிற்கு வர இன்னும் 100 ஆண்டுகள் ஆகும். அதுவரை இந்த மாதிரியான ஓட்டங்கள் தொடரத்தான் செய்யும்.

அவள் அப்படி ஓடாமல், தனக்கு பிடிக்காதவரை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை முழுவதும் திருப்தியில்லாமல் போராடும் நிலை ஏற்படலாம். அதனால் இருவரும் நிம்மதியை இழந்து விவாகரத்து செய்யும் நிலையும் ஏற்படலாம். அதனால் ஆணோ, பெண்ணோ தைரியமாகத் தன் காதலை வெளிப்படுத்த வேண்டும்'' என்கிறார் டாக்டர் கணேசன் அடைக்கண்.



லண்டன் பேராசிரியர் டாக்டர் டோனி வார்னே,
டாக்டர் காமராஜ், டாக்டர் எலிசபெத் ஆகியோருடன்...
மாநாட்டை நடத்திய பிரபல செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் டி.காமராஜிடம் கள்ளக்காதல் கொலைகளைத் தடுக்க, மாநாடு எந்த அளவில் துணைபுரியும் என்று கேட்டபோது அவர் கூறியதாவது:-

``திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்படாதவாறு தொடக்கத்தில் இருந்தே கவனிக்க வேண்டும். காதலிக்கும் பெண்ணை கட்டாயப்படுத்தி இன்னொருவருக்கு கணவராக்க முயற்சிக்கும் போது, `காதலர் நல்லவர். திருமணத்தின் மூலம் அவரை இழக்கிறோம்' என்ற எண்ணமும், புதிதாக வரும் கணவரை நாம் ஏமாற்றுகிறோம் என்ற எண்ணமும் ஏற்படும். சில பெண்களுக்கு `நம்மை ஏமாற்றி இன்னொருவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்' என்ற எண்ணம் உருவாகும்.

அவள் பெற்றோருக்கு பயந்து, அவர்கள் பேசி முடிப்பவரை திருமணம் செய்து கொண்டால் காதலனை ஏமாற்றிய குற்ற உணர்வு தோன்றும். அதனால் திருமணத்திற்குப் பிறகு அந்த கணவனை தொட விடமாட்டாள். காதலனை நினைத்துக் கொண்டே கணவரோடு வாழ்வாள். இதே நிலை கணவனுக்கு ஏற்பட்டால் அவன் காதலியை நினைத்துக் கொண்டு மனைவியோடு பெயரளவுக்குத்தான் வாழ்வான். இப்படிப்பட்ட வாழ்க்கையில் அன்பும், திருப்தியும் குறையும் போது புதிய நபர் அவர்களின் வாழ்க்கைக்குள் பிரவேசமாகிறார்கள் அல்லது பழைய காதலனோடு மீண்டும் தொடர்பு ஏற்படுகிறது.

முற்காலத்தில் பெண்கள் முழுமையாக ஆண்களை சார்ந்திருந்தார்கள். அதனால் சொல், செயல் எல்லாவற்றிலும் ஆணாதிக்கம் இருந்தது. பெண்கள் வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக் கொண்டார்கள். 2-வது உலகப் போருக்கு பின்பு எக்கச்சக்கமான ஆண்கள் இறந்து விட்டதால் பெண்கள் வேலைக்கு வந்தார்கள். பொருளாதார சுதந்திரம் கிடைத்தது. பின்பு கருத்தடை மாத்திரைகள் விற்பனைக்கு வர பெண்களுக்கு செக்ஸ் சுதந்திரமும் கிடைத்தது. இதனால் பெண்கள் சமூகம் முற்றிலும் மாறி விட்டது.

அந்த மாற்றங்களை ஆண்கள் புரிந்து கொண்டு, தங்களை முழுமையாக மாற்றிக் கொள்ள வேண்டும். பெண்கள் முழு சந்தோஷத்தோடும், திருப்தியோடும் வாழும் சூழலை அவர்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் தான் சமூகச் சிக்கல்களைத் தீர்க்க முடியும். திருட்டுக்காதல் தொடர்புடைய வன்முறைகளை போக்க முடியும். இதற்கு அன்பை சேமிக்கும் காதல் வங்கி துணை புரியும்'' என்கிறார்.

நன்றி : தினத்தந்தி

Monday, February 22, 2010

Dubai Shopping Festival 2010 - துபாய் ஷாப்பிங் திருவிழா பாகம் - 2..



























Dubai Shopping Festival 2010 - துபாய் ஷாப்பிங் திருவிழா பாகம் - 1..



நுழைவுவாயில்..







நானும் என் நண்பர்களும்..