Thursday, March 4, 2010

நித்யானந்தா - சினிமா நடிகைகளும்...!



பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்த சாமியார் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொதிப்படைந்த பக்தர்கள் பல நகரங்களிலும் உள்ள அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

பல இடங்களில் நித்யானந்தரின் உருவப் படங்களை செருப்பால் அடித்து கொளுத்தினர். திடீரென நித்யானந்தா தலைமறைவானது பரபரப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நித்யானந்தாவின் ஆசிரமங்களுக்கு பல நடிகைகள் வந்து சென்றுள்ளனர். பழம் பெரும் கதாநாயகியின் சகோதரி அவரது மகள் ஆகியோரும் நடிகைகள். சகோதரி மகள் நடிகைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் நித்யானந்தாவை சந்தித்துள்ளார். அப்போது அவருடன் நடிகைக்கு தொடர்பு ஏற்பட்டது. நித்யானந்தாவுக்கு நடிகைகளுடன் தொடர்பு ஏற்பட இவர் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. ஆசிரமத்துடன் தொடர்புடைய நடிகைகளின் பட்டியலில் சினிமாவிலிருந்து தற்போது ஒதுங்கியிருக்கும் நடிகைகள் நடித்து வருபவர்கள் திருமணமானவர்கள் என பலர் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவருமே நித்யானந்தாவுடன் நெருங்கி பழகியுள்ளனர். ஹீரோயினாக நடித்து பிறகு சீரியலில் நடித்தும் அங்கிருந்தும் காணாமல் போன யுவ நடிகை சின்னப்பூவாய் மெல்லப்பேசும் நடிகை என பலருக்கு நித்யானந்தா ஆசிரமத்துடன் தொடர்பு உள்ளது. விஷயம் வெளியானதால் அந்த நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.


நிர்மலமான நடிகை
நித்யானந்தாவிடம் பல சினிமா நடிகைகள் தொடர்பு வைத்துள்ளனர். அவர்களில் ஒருவர் நடிகை ராகசுதா. இவர் தமிழில் ராமராஜன் ஜோடியாக ‘தங்கத்தின் தங்கம்’ நெப்போலியன் நடித்த ‘தமிழச்சி’ ‘தம்பி’ ‘அம்முவாகிய நான்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கை மகளான இவர் யோகா வகுப்புகளுக்கு சென்று வந்தார். சென்னையில் நித்யானந்தா நடத்திய யோகா வகுப்புக்கு சென்று வந்த அவர் நித்யானந்தாவை பார்த்த உடனேயே அவர் காலில் விழுந்து வணங்கினாராம். அதிலிருந்து அவருடைய ஆசிமரத்தில் சேர்ந்து சன்னியாசி ஆனார். மைசூரிலுள்ள இவரது ஆசிரமத்தில் சுவாமி நிர்மலானந்தா என்ற பெயரில் சில வருடங்களாக யோகா கற்றுக்கொடுத்து வருகிறார் ராகசுதா. இவர்தான் சாமியாருக்கு பல நடிகைகளை அறிமுகப்படுத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் பல முன்னாள் நடிகைகள் மற்றும் டிவி நடிகைகளும் அடங்குவர் என்றும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மோசடி புகார்கள் குவிகின்றன

ஆசிரமம் அமைந்துள்ள இடத்திற்கு வந்திருந்த அதே ஏரியாவைச் சேர்ந்த பாபு என்பவர் கூறும்போது “நித்தியானந்தா பீடம் 2003ம் ஆண்¢டு வாக்கில் அமைக்கப்பட்டது. இதற்காக இப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் மிரட்டி நிலங்கள் குறைந்த விலையில் வாங்கப்பட்டன. சில பகுதிகளில் அடுத்தவர் நிலங்களையும் ஆக்கிரமித்தனர்’’ என்றார்.

சந்தனக்கட்டை மீட்பு் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் நேற்று மதியம் வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். டி.சி.எப். ஆசிரமத்தில் சுமார் 60 முதல் 80 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாமியார் புலித்தோல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்தும் வனத்துறை விசாரணை செய்து வருகிறது.

80 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆசிரமத்தின் உள்ளே 8 முதல் 10 கட்டிடங்கள் உள்ளன. சில கட்டிடங்கள் வெளிநாட்டு பக்தர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர தியானம் செய்வதற்கு குடிசை வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 3 குடிசைகள் நேற்று தீவைத்து கொளுத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் அதை கொளுத்தினார்களாடூ அல்லது ரகசிய ஆவணங்களை அழிக்கும் முயற்சியா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

நித்யானந்தா தலைமறைவு

கொதிப்படைந்த பக்தர்கள் பல நகரங்களிலும் உள்ள அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பல இடங்களில் நித்யானந்தரின் உருவப் படங்களை செருப்பால் அடித்து கொளுத்தினர். திடீரென நித்யானந்தா தலைமறைவானது பரபரப்பை அதிகரித்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் நித்யானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் நடத்தி வருபவர் பரமஹம்ச நித்யானந்தா (31). தமிழகத்தில் சென்னை திருவண்ணாமலை உள்பட பல நகரங்களிலும் இவரது ஆசிரமங்கள் உள்ளன. உலகின் பல நகரங்களுக்கும் சென்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். இந்நிலையில் பிரபல நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் படுக்கை அறை வீடியோ காட்சிகள் நேற்று வெளியாயின. இது பெரும் பரபரப்பையும் பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை பொதுமக்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் நேற்று இரவு முற்றுகையிட்டனர். ஆசிரமத்துக்கு உடனே சீல் வைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பதற்றம் அதிகரித்ததால் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சிவபாபு கைது செய்யப்பட்டார். ஆசிரமத்தில் தங்கியிருந்த 45 ஊழியர்கள் நேற்று நள்ளிரவு நித்யானந்தாவின் பேனர்கள் போஸ்டர்களை ஆவேசமாக கிழித்து எறிந்துவிட்டு வெளியேறினர். ஆசிரமத்தை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சொந்த ஊரான தி.மலையில் ஆசிரமம் அமைக்க நித்யானந்தா ஆசைப்பட்டார். இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பவழக்குன்று மலையை ஆக்கிரமிக்க முயன்றுள்ளார். அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் 2 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதையில் உள்ள நிருதிலிங்கம் அருகே 3 ஏக்கர் பரப்பில் ஆசிரமம் அமைத்தார். அங்கு அவர் தங்க சொகுசு அறையுடன் கட்டிடம் கட்டப்பட்டது. திருவண்ணாமலைக்கு வரும்போது அங்குதான் தங்குவார். கடந்த ஜனவரி 8ம் தேதி பிறந்தநாள் விழாவை இங்கு விமரிசையாக கொண்டாடியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மலை மாவட்ட இந்து முன்னணி தலைவர் டி.எஸ்.சங்கர் கூறுகையில் ‘‘ஆடம்பர வாழ்க்கை வாழும் நித்யானந்தர் கிரிவலப்பாதையில் ஆசிரமம் கட்டக் கூடாது என்று ஏற்கனவே கூறினோம். அவரது சுயரூபம் தற்போது அம்பலமாகியுள்ளது. அவரை உடனே கைது செய்ய வேண்டும். தி.மலைக்குள் அவரை இனி விடமாட்டோம்’’ என்றார். புதுச்சேரி வில்லியனூர் ஏம்பலத்தில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்தை பொதுமக்கள் சூறையாடினர். ஜன்னல்கள் விளக்குகள் மின்விசிறிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சாமியார் பேனரை தீவைத்து கொளுத்தி செருப்பால் அடித்தனர். பதற்றம் அதிகரித்ததால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் இந்து முன்னணி அமைப்பினர் மாநில பொதுச்செயலாளர் முருகையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நித்யானந்தாவை கைது செய்து சொத்துக்களை முடக்க வேண்டும் என்று மக்கள் கோஷம் எழுப்பினர்.
கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் பேனர்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கடலூர் மோகினிபாலம் பகுதியில் ஆசிரமத்தின் பெயர்பலகையை பொதுமக்கள் தார்பூசி அழித்தனர். நெல்லை டவுனில் உள்ள நித்யானந்தர் தியான மையத்தில் நித்யானந்தா படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர் போஸ்டர்களை நிர்வாகிகளே கிழித்து எறிந்தனர். இந்த மையத்தில் சில மாதம் முன்பு அவர் ஆன்மீக உரையாற்றியுள்ளார். சீர்காழி சட்டநாதபுரம் மனோன்மணியம் நகரில் நித்யானந்த பீடத்தை அவர் சமீபத்தில் திறந்துவைத்தார். இங்கு தினமும் பஜனை தியானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. டிவியில் ஆபாச காட்சிகளை பார்த்த மக்கள் ஆவேசமடைந்து நித்யானந்தா படங்கள் பேனர்களை நேற்று இரவு தீ வைத்து கொளுத்தினர்.

சென்னையில் 15க்கும் அதிகமான இடங்களில் அவரது சீடர்கள் ஆசிரம கிளை வைத்து தியான வகுப்புகள் ஆன்மீக நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தி வந்துள்ளனர். நேற்று இரவோடு இரவாக அனைத்து இடங்களில் இருந்த போர்டுகள்இ பேனர்கள் அகற்றப்பட்டன. பல இடங்களில் ஆசிரம கிளைகள் பூட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் செக்ஸ் லீலை காட்சிகள் வெளியானதை தொடர்ந்து நித்யானந்தா திடீரென தலைமறைவாகிவிட்டார். ஆசிரம நிர்வாகிகள் செல்போனில் அவரை தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை.

நித்தியானந்தா தலைமறைவாகிவிட்டார் கமிஷ்னர்
பரமஹம்ச நித்தியானந்தா சாமியார் பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாச லீலைகளில் ஈடுபட்டிருக்கும் வீடியோ வெளியானது. இதையடுத்து நாடெங்கிலும் நித்தியானந்தாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நேற்று சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ராம.சிவசங்கர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தார். மேலும் பல வழக்கறிஞர்களூம் புகார் கொடுத்தனர். இந்நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர் ’’வழகறிஞர்களின் புகாரை ஏற்று நித்தியானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’என்று தெரிவித்தார். நித்தியானந்தா தலைமறைவாகிவிட்டார் என்பது உண்மை’’என்றும் தெரிவித்தார்.

நன்றி : தினகரன்
தினகரன்

Tuesday, March 2, 2010

இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்!



1. எண்முறையையும், பூஜ்யத்தையும் கண்துபிடித்த நாடு.

2- பூஜ்யத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி ஆரியபட்டர் பிறந்துவளர்த்த பூமி.

3- செஸ் விளையாட்டு கண்டுபிடிக்கபட்ட நாடு.

4- கிரானைட்(சலவைக் கல்லால்)1000-ஆண்டுகளுக்குமுன் கட்டபட்ட உலகின் முதல்ஆலயம்(தஞ்சை பிரகிதீஸ்வர்ர்)உள்ள நாடு.

5- உலகில் மிக அதிகமான ஆட்களை வேலைக்கு அமர்த்தும் இரயிவே அமைப்பு உள்ள நாடு.

6- உலகில் அதிகமான தபால் நிலையங்கள் உள்ள நாடு.

7- உலகின் முதல் பல்கலைகழகம் உருவாக்கப்பட்ட நாடு (கி.மு.700இல்)

8- 1896-ம் ஆண்டுவரை வைரம் கிடைத்த ஒரே நாடு.

9- மனித குலத்திற்கு மருத்துவக் கல்விமுறையை முதன் முதலாக ஆறிமுகப்படுத்திய நாடு.

10- உலகின் மிக உயரமான பெய்லி பாலத்தைக் கொண்டுள்ள நாடு.

11- உலகின் மிகப் பழமையான, தொடர்சியான கலாச்சரம் கொண்டுள்ள நாடு.

12- தனது கடந்த பத்தாயிரம் ஆண்டு வரலாற்றில் எந்த நாட்டையும் ஆக்ரமிக்காத நாடு.

13- உலகின் மிகப் பெரிய ஐனநாயக நாடு.

14- உலகில்இன்றுவரை தொடர்த்து மக்கள்வாழ்ந்து கொண்டிருக்கும் மிகப் பழமையான நகரைக் கொண்டுள்ள நாடு.

15- வேளாண்மைக்காக முதலில் கட்டப்பட்ட நீர் தேக்கத்தைக் கொண்டுள்ள நாடு.

16- அறுவை சிகிச்சை முதலில் நடத்தப்பட்ட நாடு இந்தியாதான். உலக அறுவைச் சிகிச்சையின் தந்தை சுசுருதா!

17- 5000 ஆண்டுகளுக்கு முன்னதாக அநேக கலாச்சாரங்கள் காடுகளில் வாழும் நாடோடி மக்களின் கலாச்சாரமாக இருந்த வேளையில் மிகப் பழமையான நாகரிகத்தை உருவாக்கிய நாடு.

18- முக்கிய 4 மதங்கள் பிறந்த நாடு (இந்து, புத்தம் , சைனமதம், சீக்கியம் . உலக மக்கள் தொகையில் 25 விழுக்காடு மக்கள் இவற்றைப் பின்பற்றுகின்றனரர்)

19- வன்முறையின்றி ஜனநாயகத்தைப் பெற்ற நாடு.

20- உலகில் விஞ்ஞானிகளையும், பல அறிவியியல் வல்லுனர்களையும் அதிகமாக கொண்டுள்ள இரண்டாவது நாடு.

21- குளியல் அறைகளை முதலில் கட்டிய நாடு (ஏறத்தாழ 4500 ஆண்டுகளுக்கு முன்னர்).

22- நல்ல மிளகாயும், மாங்கனியும் முதலில் பயிர் செய்த நாடு.

23- காய்கறிகளைப் பயிர் செய்வதற்கான எண்ணம் உதித்த நாடு.

24- முதலில் மருத்துவனை கட்டிய நாடு (ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர்).

25- இளையோரை அதிகமாக கொண்டுள்ள நாடு (35 வயதுக்குட்பட்டவரகள்.) 1.71 விழுக்காட்டினர் .அதாவது 74 கோடியே 20 இலட்சம் பேர்.ஒவ்வோர் ஆண்டும் 22 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பிறக்கின்றனர்). ஆண்டுகளுக்கு

மேலே கூறப்பட்ட அத்தனை பெருமைகளுக்கும் சொந்தமான நாடு “நமது இந்தியா” தான்.


நன்றி :
ஈகரை தமிழ் களஞ்சியம்

Monday, March 1, 2010

ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!!


நான் ஏழாவது படிக்கும் போது என்னமோ தெரியல ரஜினி மீதும் அவர் படங்கள் மீதும் அளவுக்கடந்த பிரியம் ரஜினிய தவறா சொன்னா கடுமையான் கோபம் வரும்..! ஏன் ஏன் என என்னும் ஒரு கேள்வி அப்போதுதான் எங்க தெரு பசங்க அவன் ரஜினி ரசிகண்டானு சொன்னாங்க..!?
என்னைப்போலவும் எங்க தெருவில் ஒருசில பசங்க ரஜினியின் ரசிகனா இருந்தாங்க நாங்கள் ஒன்றாக கூடினோம்….. எங்க தெருவிலும் ஒரு ரசிகர் கூட்டம் உருவானது எங்க தெருவுக்கும் பக்கத்து தெரு பசங்களுக்கும் எப்போதுமே ஆகாது..! எங்களுக்கு போட்டியாக அவர்களும் ரஜினி ரசிகராக ஆனார்கள்..!!?
அவர்களுக்கும் எங்களுக்கும் ஒரு போட்டி அப்போ எங்க ஏரியாவுல மாவிரன் படம் இன்று முதல்னு போஸ்டர் ஒட்டி இருந்துச்சு அங்க எங்க ஏரியா ரசிகர் மன்றத்தின் மிக பெரிய ஒரு கண்ணாடி போட்டோ மாட்டி இருந்தார்கள்.அதேப்போல் நாமும் வைக்கலாம் என..! யார் பெரிய போட்டோ வைக்கிரார்கள் என்பதுதான் போட்டி..
எங்க தெரு பசங்களும் ஒரு முடிவு பண்ணினோம் அவரவர் வீட்டில் ஒரு ரூபாய் வசுல் செய்வது என்று அதேப்போல் கூட்டமாக சென்று அவஅவரின் அம்மாக்களை சந்தித்து விபரம் கூறினோம்..ஒருசில அம்மாக்களை தவிர மற்றவர்கள் வீட்டில் திட்டுதான் கிடைத்த்து… மொத்த வசூல் 7ரூபாய்தான் ஆனாது இதை வைத்து ஒன்னுமே செய்யமுடியாது.. அப்போது ஒரு போட்டோ பிரேம் செய்யனும்னா குறைந்த்து 25 ரூபாயாவது தேவை..!
என்ன செய்வது என ஆலோசிச்ச்துக் கொண்டு இருந்த போது என் நண்பன் சொன்னான் டேய் எங்க தாத்தா போட்டோ பரனியிலே ரொம்பநாளா கிட்க்கது யாருக்கும் தெரியாம எடுத்துதாரேன்னு சொன்னான்.எனக்கும் அதுசரினு பட்டது. நான் எப்பாடா கொண்டுவருவேனு கேட்டேன் மதியம் அம்மா தூங்கிடுவா அப்போ கொண்டுவரேன்னு போய்ட்டான்.. நானும் நண்பனின் வரவுக்காக காத்துக்கிடந்தேன்..
வந்தான் நண்பான் நான் நினைத்தவிட பெரிய போட்டோ.. வயதானவனிரின் தலையில் பொட்டுவைத்த அந்த தாத்தாவை பார்க்க பாவமா இருந்துச்சு நமக்கு போட்டிதானே முக்கியம் என பின்னில் இருந்த ஆணிகளை மெதுவாக உருவி போட்டோவை எடுத்துவிட்டேன்..நண்பன் சொன்னான் கிழித்துடுடலாம்டா இல்லாட்டி மாட்டிக்கொள்வோம் என்றான் நானோ வேண்டாம்டா மாவிரன் சினிமா மற்றியவுடன் அதை அதே போட்டோ மாற்றி உன் வீட்டில் வைத்து விடுனு சொன்னேன்…அவனும் நல்ல ஐடியா செய்துவிடுவோம்னு சொன்னான்..
வசூல் அனா 7ரூபாய்க்கு ஒரு ரஜினி படம் வாங்க மார்கெட் சொன்றோம் கிடைக்கவில்லை..! ஒரு கடையில் காலண்டர் மாட்டியிருந்த்து அதில் ரஜினியின் அழகான போட்டோ அதை விலைக்கு வாங்கினோம்..
மாட்டினோம் தியோட்டரில் போட்டோவை எதிர் தெரு பசங்க மூக்கு உடைந்தது.. அவர்களை காணும் போதெல்லாம் கிண்டல் செய்தோம்..

இப்படி பல முறை செய்து வீட்டில் உதை வாங்கியதுதான் எங்களுக்கு கிடைத்த மெடல்கள்..!




இப்போ வாரேன் அஜித்க்கு மாறிய கதைக்கு.. நாம் ரசிக்கும் கலைஞன் போல் வேர் ஒருவர் செய்தால் அது நமக்கு பிடிக்காது அது அவர் செய்தால்தான் பிடிக்கும் அதுப்போல 1998 ல் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்கள் விஜய் & அஜித் அதில் விஜய் ரஜினியின் ரசிகர்களை கவர்வது போல் செய்த சில பஞ்ச் டைலாக்கும் ஸ்டைல்களும் என்னை அவர் மீது ஒரு பெறுப்பை உறுவாக்கியது அதில் மறுபட்டவராக நம்ம தல தெரியவே அவரின் காதல் கோட்டை,ஆசை & அவள் வருவாளா போன்ற படங்கள் என் மனதில் நீங்க இடம் பிடித்து இருந்தனா..


என்னுள் அஜித் என்ற கலைஞன் உள்ளே வந்தான்..பின் அவரின் படங்களிம் பஞ்ச் வர தொடங்கின அதன் பிறகு வந்த அனைவரின் படங்களும் பஞ்ச் டைடில் சாங்க என சினிமா மீதே பெரிய வெறுப்பை ஏற்படுத்தி விட்டன..சமிபத்தில் பார்த்த படம்தான் அசல் என்னுள் மீண்டும் அந்த கலைஞன் உள்ளில் வந்தான்.ஏன் என்று தெரியல தல……??????